பிரதமர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: வஜிர

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும், பதற்றமின்றி நிதானமாக செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...