தற்கொலை முயற்சியில் குழந்தையை களனி ஆற்றில் வீசிய தாய்!

Date:

தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன ஐந்து வயது குழந்தையை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

42 வயதான தாய் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வியாழன் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...