அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18) சனிக்கிழமை கண்டி, கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இதன்போதே, அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

இந்த பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை பதவியில் மாற்றமொன்று நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாராக கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸ்ஹரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...