அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18) சனிக்கிழமை கண்டி, கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இதன்போதே, அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

இந்த பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை பதவியில் மாற்றமொன்று நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாராக கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸ்ஹரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...