நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 3000த்திலிருந்து, 3500 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வழமையான முறையின் கீழ் ஒரு நாளைக்கு 600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.