இந்த வாரம் முழுவதும் பாராளுமன்றத்தை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

Date:

இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைக் காட்டுவதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கப்போவதாக சஜித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘நாங்கள் பாராளுமன்றத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மேலும் வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் கடுமையான மற்றும் பிற தொடர்புடைய கதைகளாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் எச்சரிப்பைக் கேட்க நாங்கள் விரும்பவில்லை.

மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் சரியான உத்தரவாதத்தை வழங்கவில்லை’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...