கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூலை 22 ஆம் திகதி திறக்கப்படும்!

Date:

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவ பாதையாத்திரைக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக கதிர்காமம் கந்தன் ஆலய பஸ்நாயக்க நிலமே திசான் குணசேகர தெரிவித்தார்.

ஜூலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்படும் காட்டு பாதை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மீண்டும் பூட்டப்படும்.

இந்த காலப்பகுதிக்குள் பாதயாத்திரீகர்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமத்துக்கு வந்து சேரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

கதிர்காமம் ஆடிவேல் விழா திருவிழாவிற்கு வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வரும் யாத்ரீகர்கள் குமண மற்றும் யால வன பூங்காக்களை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 05 வரை அனுமதிக்கப்படுவார்கள்.

கதிர்காமம் தேவாலயத்தின் 2022 எசல திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரை குழுவினர் தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...