ஆகஸ்ட், டிசம்பரில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும்: மாணவர்கள் வருகை பற்றி அறிக்கை கோருகிறார் கல்வி அமைச்சர்

Date:

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைக் கல்வியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் இவ்வாரம் பாடசாலை செயற்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர முடிந்தால் பாடசாலை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்தமை தொடர்பில் மாகாண மட்டத்தில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...