ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: சர்வதேச உதவியை கோரிய தலிபான் அமைப்பு!

Date:

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின்பு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் சர்வதேச ஆதரவைக் கோரியுள்ளனர்.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 1,500 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாழடைந்த, பெரும்பாலும் சேற்றில் கட்டப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் புதைந்துள்ளதுடன் தென்கிழக்கு பக்திகா மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உதவிகளை வழங்க ஐ.நா. உதவ முன்வந்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் முற்றிலும் அழிந்த கிராமங்கள், பாழடைந்த சாலைகள் மற்றும் மொபைல் போன் கோபுரங்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அவர்கள் அச்சம் இருப்பதாக உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மீட்பவர்கள் பிபிசி செய்திதளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு தசாப்தங்களில் நாட்டைத் தாக்கும் மிக மோசமான நிலநடுக்கம், இதுவாகும். மேற்கத்திய ஆதரவு அரசாங்கம் சரிந்த பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய இயக்கமான தலிபானுக்கு ஒரு பெரிய சவாலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(மூலம்: பிபிசி)

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...