பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

Date:

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கடந்த வாரம் போலவே அடுத்த வாரமும் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால், அதிபர்கள் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
மேலும் போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்த நாள் தனியார் விடுமுறையாக கருதப்படாது என்றும் கல்வி அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...