கோட்டைக்கு அருகில் பயணிக்கவிடாமல் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

Date:

கொழும்பு கோட்டை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நடாத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதிலிகே மாவத்தையில் உள்ள வங்கிக்கு தானும் மேலும் மூன்று பெண்களும் செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீதியை மறித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை காண வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்லும் வீதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை  சமூக ஊடகத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர அதே வீதியில் அமைந்துள்ள ஒரு வங்கிக்கு வந்ததாகக்  பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொலிசார் உடனடியாக தடுப்புகளை வைத்து, பொது மக்களுக்கு திறந்திருந்த போதும், சாலைக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தன்னை நுழைய விடாமல் பொலிசார் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...