கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான சூழல்: கைதி ஒருவர் பலி: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!

Date:

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் என்பது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிறுவனமாகும், இது நீதி அமைச்சின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தால் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...