கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான சூழல்: கைதி ஒருவர் பலி: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!

Date:

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் என்பது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிறுவனமாகும், இது நீதி அமைச்சின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தால் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...