எரிபொருள் விநியோகம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Date:

எரிபொருள் கொள்வனவு, விநியோகம், போன்றவற்றில் எந்தெந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் 14ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...