எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்றார்.
எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடியைச் சமாளிக்கவும் தீர்க்கவும் நிறைய திட்டமிடல் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது, என்றார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 44,000 மெட்ரிக் டன் உரம் முதல் சரக்கு நாளை வர உள்ளது.
ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விநியோகம் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதேவேளை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில், மக்களைத் தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமாகவும் விரும்பத்தகாததாகவும் உள்ளது. இது மீண்டும் நாட்டை பின்னோக்கி தள்ளும்.
சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
எனவே, தற்போதைய நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டார்.