அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இராணுவ சிப்பாயிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்பு!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த ஜுலை 13ஆம் திகதி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாயை தாக்கி T-56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்திற்கு அடியில் இருந்து கடற்படையின் சுழியோடிகள் துப்பாக்கி மற்றும் வெற்று மெகசின்களையும் மீட்டுள்ளனர்.

இதையடுத்து துப்பாக்கி மற்றும் வெற்று மகசீன் ஆகியவை வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...