ஊடகவியலாளர்கள், கடமைகளை சுதந்திரமாகச் செய்ய ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்!

Date:

அண்மையில், காலி முகத்திடலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியமை, தாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் மீடியா போரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில், ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கடமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டதுடன் சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரும் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செயற்பாட்டை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிப்பதாக போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நடுநிலையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு தடைகளும் இல்லாமல் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக்கொள்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...