ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இருவர் கைது!

Date:

ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி – மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து, ரீ-56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களில் ஒருவரது வீட்டிலிருந்து போலியான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 2 வாகன இலக்க தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கஹவத்தை மற்றும் எம்பிலிப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...