‘நாங்கள் வெளியேறுகிறோம், ஆனால் போராட்டம் முடிவடையவில்லை’ :போராட்டக்காரர்கள்

Date:

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக பொது தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி,

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக நாம் பொதுவான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

இதனால் போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்றும், முறை மாற்றம் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மனோஜ் நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ‘இந்த அமுலாக்கத்தின் மூலம் கிராமம் வரை போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளோம், உள்ளூரிலும், நகரங்களிலும் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி உச்சத்துக்கு உயர்த்த தயாராக உள்ளோம்.

இன்று அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அடக்குமுறை அதிகமாக, போராட்டமும் வளர்கிறது. இதை ஒரு அரசாலும் தடுக்க முடியாது’ என்றார்.

பிராந்திய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...