‘நாங்கள் வெளியேறுகிறோம், ஆனால் போராட்டம் முடிவடையவில்லை’ :போராட்டக்காரர்கள்

Date:

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக பொது தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி,

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக நாம் பொதுவான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

இதனால் போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்றும், முறை மாற்றம் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மனோஜ் நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ‘இந்த அமுலாக்கத்தின் மூலம் கிராமம் வரை போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளோம், உள்ளூரிலும், நகரங்களிலும் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி உச்சத்துக்கு உயர்த்த தயாராக உள்ளோம்.

இன்று அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அடக்குமுறை அதிகமாக, போராட்டமும் வளர்கிறது. இதை ஒரு அரசாலும் தடுக்க முடியாது’ என்றார்.

பிராந்திய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...