ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆறுவயது காத்தான்குடி சிறுமி: ஸப்னம் இமாரா!

Date:

காத்தான்குடி, மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்விகற்றுவரும்
மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசூர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இவர் வைத்தியர் ஹுஸ்னி (MBBS) மற்றும் சப்னம் சன்ஸிதாவின் புதல்வியும் ரபீக்(PHI), முஹம்மத் சனூன் ஆகியோரின் பேத்தியுமாகும்.

இச் சிறுமியின் திறமையை பாராட்டியும் ஆசிய சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தமைக்காகவும் உலக World Book of Records London இனால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவதில் மிகப்பெரும் சாதனையாளராக தனது பெயரை ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவுசெய்து ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமை பெற்றுக்கொடுத்திருக்கும் இச் சிறுமி எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் பதிவு செய்ய வேண்டும் என NEWSNOW வாழ்த்துவதோடு அவருக்காக பிரார்த்தனையும் செய்கின்றது.

(எம்.பஹ்த் ஜுனைட்- ஊடகவியலாளர்)

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...