மறைந்த ஏ.எச்.எம். அஸ்வரின் 5ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

Date:

மறைந்த  அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் 5 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (31) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 08 , எல்விட்டிகல மாவத்தையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொள்வார்.

கௌரவ விருந்தினராக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் கலந்துகொள்வதோடு, சிறப்பு பேச்சாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...