நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழியை கூறுகிறார் அநுர!

Date:

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாட்டு மக்கள் என அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து போராடினால் இரண்டு மூன்று வருடங்களில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாயின் மக்களின் ஆணையுடன் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நிறைவேற்றினால் மக்கள் அரசாங்கத்திற்கு ஓரிரு வருடங்களை வழங்குவார்கள் எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆணைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அமைப்பது ஆணைக்கு எதிரானது எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை,   இடைக்கால வரவு செலவுத் திட்டமும் ஆணைக்கு எதிரான  திட்டம் எனவும், நெருக்கடியில் இருந்து மீள ஆணை தேவை எனவும், தற்போது ஆணை இல்லாத சில மிதக்கும் மனித தூண்கள் வந்து நாட்டை ஆள்வதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...

மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள்...