எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பாராளுமன்றில் அஞ்சலி

Date:

பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு சபாசாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதனையடுத்து பிரதமர் குணவர்த்தன அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை வாசித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல இரங்கல் செய்தியை வாசித்தார்.

அத்துடன் மகாராணியின் மறைவையொட்டி இன்று முதல் இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...