கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு!

Date:

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருந்துகள்  வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்தகங்களில் இன்னும் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் மருந்தாளர் கபில டி சொய்சா தெரிவித்தார்.

கண் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அடுத்த சில மாதங்களில் 231 வகையான மருந்துப் பொருட்கள் நாட்டில் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் காஸ், பஞ்சு, உமிழ்நீர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஹைட்ரோஃபோபியா, பாம்பு விஷம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு நிறுத்த மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் இருப்பதாகவும் மருத்துவ வழங்கல் துறை கூறுகிறது.

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு பொறுப்புடனும் திட்டமிட்டுவும் செயற்பட்டு வருவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டி.ஆர்.கே ஹேரத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...