எல்.ரீ.ரீ.ஈ, ஈஸ்டர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானம்!

Date:

விடுதலைப் புலிகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரின் தடுப்புக் காவலில்  உள்ளவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில்,  சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...