இன்று முதல் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனை கடைகளுக்கு பூட்டு: கிழக்கு ஆளுநர்

Date:

இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்  (கோழிக் கடைகளைத் தவிர) மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று  ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ,  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட விலங்குகள் என்ற போர்வையில் இந்த சடலங்களை சட்டவிரோதமாக வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும், இறைச்சிக் கடைகளில் விற்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே, அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த கால்நடைகளை சட்டவிரோதமாக கொண்டு செல்வதைத் தவிர்க்க, அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அனைத்து கால்நடைகளின் சடலங்களையும் பொது இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...