பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து – 50 பேர் உயிரிழப்பு

Date:

பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் இன்று(ஜன.29) பலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து  பயணிகளுடன் பேருந்து ஒன்று, கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.

லாஸ்பேலா என்ற இடத்தில் வளைந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தூணில் மோதிய பேருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு குழந்தை, ஒரு பெண்மணி உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே உயிருடன்
மீட்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...