தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

Date:

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களிலும் சிலர் அந்த அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு  பாடசாலையில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், மக்கள் இரண்டு, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்தனர்.ஆனாலும் அந்த பிரச்சனையை தன்னால் சமாளிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...