ரயில் சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட இவ்விடயம் தொடர்பாக பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் ரயில்கள் வழமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.