இராஜினாமா செய்வதற்கு முன் முஜிபுருக்கு, ஜனாதிபதி கூறிய செய்தி?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தது தாம் தான் எனவும், அதன் காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், அந்த திகதி உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை.

முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். தற்போது அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும். அவரை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...