புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காதிமார்களுக்கான செயலமர்வு!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதிபதிகளுக்கான முழு நாள் பயிற்சி அமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, (12) கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இப் பயிற்சி செயலமர்வை இலங்கை காதி நீதிபதிகள் சபை, ஸம் ஸம் பவுண்டேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சிறப்பாக திட்டமிடப்பட்ட விளக்கக் காட்சிகள், காதி அமைப்பு மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய பயிற்சியுடன் கூடிய செயலமர்வாக இருந்தது.

இப் பயனுள்ள நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இடம்பெற்ற இரு அமர்வுகளை, இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஏ.எம். ஃபௌஸ், ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர், அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீஃபா, பாடநெறிப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், மற்றும் காதி சபையின் துணைத் தலைவர் இஃபாம் யஹியா ஆகியோர் நடத்தினார்கள்.

இதுவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு 65 பேரில் 55 காதிகளை நியமித்துள்ளது. இவர்களில் 52 காதிமார்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...