அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன: அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர்  அத்தபத்து தெரிவித்தார்.

பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கான உரிய வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...