அலாஸ்கா மற்றும் அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்!

Date:

அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 49.3 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதே வேலை, அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...