ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தலைமையில் 10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையிலான 5 ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
“வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது தனியார் ஈடுபாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பில் கற்றுக்கொள்கிறோம்” என மிலிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.