15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு

Date:

இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் சேவைக்கான 51 ஆவது குழுவாக இந்த 15 இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 302 இலங்கையர்கள் தாதியர் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைவாய்ப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வௌிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...