களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் ஆராய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை

Date:

களுத்துறை பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தமை மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கான செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் 16 வயதான சிறுமி உயிரிழந்தமை, மற்றுமொரு பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஆசியரியரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கையை கோரியுள்ளது.

இதற்கமைய குற்றச் செயலின் தன்மை, அது தொடர்பில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சமர்ப்பணங்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதற்கான காரணம் என்பன தொடர்பில் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளின் போது ஏதேனும் முறைக்கேடுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றில் தங்களது தரப்பு சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...