26ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நேபாளி!

Date:

உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசாங் தவா சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகத்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசா தவா சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை இது தொடர்பாக பேசிய அரசாக சுற்றுலா அதிகாரி பிக்யன் கொய்ராலா , ஷெர்பா பசாங் தவா 8,849 மீட்டர் தூரத்தை 26 முறை ஏறி சக நேபாள வழி காட்டியான கமி ரீட்டா ஷெர்பாவின் சாதனையை சமன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது எவரெட் சிகரத்தை ஏறி வரும் கமிரீட்டா ஷெர்பா உச்சியை அடைந்தால் மற்றொரு உலக சாதனை படைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த பெண் நைலா கியானி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான ஏறும் பருவத்தில் எவரெட் சிகரத்தை அடைந்த முதல் வெளிநாட்டவர் என அதிகாரி தவா பியூட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் எவரெட் சிகரத்தை ஏற இந்த ஆண்டு 467 வெளிநாட்டவர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...