துருக்கி ஜனாதிபதித் தேர்தல்: 2 ஆம் சுற்று வாக்கெடுப்புக்கு சாத்தியம்?

Date:

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்துகான் முதலிடம் பெற்றுள்ளார்.

எனினும், எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ஏ.கே.பி எட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி அர்துகான்  49.42 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார்.

சிஎச்பி கட்சியைச் சேர்ந்த கெமால் கிளிச்தரோலு 44.95 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார். ஓடிஏ கூட்டணி வேட்பாளர் ஒகான் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு மே 28 ஆம்  திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கெமலுக்கு சாதகமாகவே வந்துள்ளன.

மேலும் துருக்கியில் 50 இலட்சம் புதிய வாக்காளர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரும் கெமலுக்கே வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர்கள் இருவரில் ஒருவர் 50% வாக்குகள் பெறவில்லையெனில், மே 28 அன்று துருக்கியில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...