இலங்கை ஜூன் மாதத்திற்குள் இறக்குமதி தடையை நீக்கும்: ஐரோப்பிய ஒன்றியம்

Date:

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்க் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு (EU) அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 நடைபெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வின் போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவாக 2020 இன் பிற்பகுதியில் இறக்குமதிக்கு தடையை விதித்த இலங்கை பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தடையை நீடித்தது.

இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம், இந்தத் தீர்மானத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு நியாயமற்றதாகக் கருதப்படும் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வெளிப்படுத்தியது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...