மதங்களை அவமதித்ததாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரிய கைது!

Date:

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடாஷா எதிரிசூரிய தெரிவித்த கருத்து ஒன்றின் பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (27) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்ட நடாஷா எதிரிசூரிய, பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளிகளையும் நீக்கியுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...