வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பநிலை நிலவும் என இன்று (29) காலை எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் செறிவான மட்டத்தில் இருக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.