நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்

Date:

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் உடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேச செயலாளரை கடமை நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக உத்தியோகபூர்வ காரில் பிரதேச செயலாளர் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அவரது சாரதி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, குறித்த சாரதி அவரது சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர் மற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவித்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணித்தவரின் உடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...