இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனும், ஆய்வுத்திறனும் குறைந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
எனவே இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியிலேயே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அடிப்படையில் ஞாயிறு பாடசாலைகளாக முன்னெடுக்கப்படுகின்ற அஹதிய்யா பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனையும் ஆய்வுத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி பற்றின செய்தியை உங்களுக்கு தருகின்றோம்.
கொழும்பு மாவட்ட அஹதிய்யா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அஹதிய்யா பாடசாலைகள் மத்தியில் ஆய்வு கட்டுரை எழுதும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய போட்டிகளில் கலந்துகொண்ட ஸராஸ் கார்டன் அஹதிய்யத்துல் தாருஸ் ஸலாம் பாடசாலைக்கு 3ஆம் இடம் கிடைத்தது.