டெங்கு பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

Date:

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குமென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

67 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோய் பரவுதற்கான அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...