இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்த மீண்டும் யோசனை!

Date:

ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மீண்டும் முன்மொழியப்பட்ட இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...