பசிலின் மல்வானை ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது: நீதியமைச்சர்

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மல்வானையில் உள்ள இந்த சொத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என பத்திரிகைகள் மூலம் அறிந்துக்கொண்ட பின்னர், அதனை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...