வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது!

Date:

மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் சுமார் 3 பில்லியன் ரூபாவை மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு 339 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சு 120 மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பொது திறைசேரி எஞ்சிய தொகையை மின்சார சபைக்கு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பல பில்லியன்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு அளிக்கும் சேவையை கருத்திற்க் கொண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...