ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தி கொழும்பில்…!

Date:

குருணாகல் – பண்டுவஸ்நுவரவில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நேற்று கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதில் நிதி நெருக்கடிகள் உள்ளன.

அத்தோடு இதுபோன்ற பாரியளவான நிகழ்வுகள் தற்போது நடத்துவது ஏற்புடையதல்ல என மைத்திரிபால சிறிசேன, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள விருந்தகம் ஒன்றில்  குறித்த நிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...