பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Date:

பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப்  பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

பட்டங்களை பறக்கவிடுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கு இடையூறாக உள்ளதாக குறித்த திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பொறியியலாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2027 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்பிற்கு ஆயிரத்து 20 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் திறன் கொண்ட 7 புதிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பணியை துரிதப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...