பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Date:

பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப்  பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

பட்டங்களை பறக்கவிடுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கு இடையூறாக உள்ளதாக குறித்த திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பொறியியலாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2027 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்பிற்கு ஆயிரத்து 20 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் திறன் கொண்ட 7 புதிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பணியை துரிதப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...