வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய தீர்மானம்!

Date:

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே அவற்றின் தற்போதைய 11.00 மற்றும் 12.00 சதவீத மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்று ( 23)  நடைபெற்றது. இந்த குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு நடைமுறையில் இருக்கும் வீதங்கள் மற்றும் சந்தை வட்டி வீதங்களை விரைவாக சரிசெய்வதற்கு இடமளிக்க வேண்டும். எவ்வாறாயினும், சில கடன் வழங்கும் பொருட்களின் சந்தை வட்டி வீதங்கள் அதிகமாக இருப்பதையும் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்பதையும் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சமீபத்திய பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த சந்தைக் கடன் வட்டி வீதங்களில் விரைவான குறைப்பை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...