சொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க தீர்மானம்

Date:

கொழும்பு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய அண்மையில் வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனால் பிரதான நகரங்களில் வீடுகளை வாங்கி தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த எழுத்துமூலக் கோரிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...