ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் அரசுக்கு அழுத்தம்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் நேற்று (11) உரையாற்றிய போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி விசாரணைகளையும் வழக்குகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...